பயனர்கள்.
ript>
திங்கள், 4 அக்டோபர், 2010
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட கூட்டத்திற்கு இடையூறு..!!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட கூட்டத்திற்கு நேற்று கட்சியின் உறுப்பினர்களினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளனர். காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்துள்ளனர். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உரையாற்ற முற்பட்டபோது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு சில உறுப்பினர்கள் கோரிய போதிலும் அதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இதனால் அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டது. குழப்ப நிலைமை காரணமாக கூட்டம் இடைநடுவில் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக